கோலாலம்பூர், ஏப் 19 – தங்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து ஆண்களிடமிருந்து அதிகமான புகார்கள் கிடைத்திருப்பதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ Nancy Shukri தெரிவித்திருக்கிறார். அமைச்சின் ஆலோசனை மையமான சமூக ஆதரவு மையங்கள் மூலம் பாலியல் தொடர்பான ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்களை ஆண்களிடமிருந்து பெற்றுள்ளதாக அவர் கூறினார். ஆண்களில் பெரும்பாலோர் தங்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து போலீசில் புகார் செய்ததைதைவிட அமைச்சின் ஆலோசனை சேவையிடம் தெரிவித்திருப்பதாக அவர் கூறினார்.
தொடக்கத்தில் ஆண்களிடமிருந்து குறைந்த புகார்கள் மட்டுமே கிடைத்தன. பாலியல் தொந்தரவு தொடர்பான ஆலோசனை சேவைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் தாங்கள் அதிகமான பாலியல் தொந்தரவுக்கு உள்ளானது குறித்து ஆண்களிடமிருந்து புகார்களை பெற்றிருப்பதாக Nancy Shukri விவரித்தார். அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் பாலியல் தொந்தரவுக்கு எதிரான Kasih Semurni Usaha கருத்தரங்கில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார்.