
பாப்பார், ஜூன்-9 – சபா, பாப்பார், கம்போங் பம்பாங்கானில் மாங்காய் பறிக்க மரம் ஏறியவர் மின்சாரம் தாக்கி மரணமடைந்தார்.
42 வயது Ahajah Abdul Musa மரத்திலிருந்தவாறே, கிளை நுனியிலிருந்த மாங்காய்களைப் பறிக்க இரும்புக் கொக்கியைப் பயன்படுத்தியுள்ளார்.
துரதிஷ்டவசமாக அது மரத்தின் மேலிருந்த மின் கம்பியில் பட்டு அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
பிற்பகல் 3 மணிக்கு தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு-மீட்புத் துறையினர், மரத்தின் மீது சுயநினைவற்ற நிலையில் அவ்வாடவர் கிடப்பதைக் கண்டனர்.
உடனடியாக மின்சாரத்தைத் துண்டித்து, பாதுகாப்புக் கையிறு மற்றும் ஏணியைக் கொண்டு அவரைக் கீழே இறக்கினர்.
எனினும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை, அங்கிருந்த மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.
மரணமடைந்தவரின் சடலம் மேல்நடவடிக்கைக்காக போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது.