புக்கிட் மெர்தாஜாம், பிப்ரவரி 29 – நாயை மோட்டார் சைக்கிளில் சங்கிலியால் கட்டி இழுந்துச் சென்ற, 46 வயது அங்காடி வியாபாரி ஒருவருக்கு, 12 ஆயிரம் ரிங்கிட் அபராதமும், ஒரு நாள் சிறைத் தண்டனையும் விதித்து புக்கிட் மெர்தாஜாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில், அவர் ஆறு மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
டான் சீ கியோங் எனும் அந்நபர் தமக்கு எதிராக குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்தாண்டு, நவம்பர் 21-ஆம் தேதி, பின்னிரவு மணி 12.06 வாக்கில், தாமான் சுகோன் இண்டாவில், நாயை மோட்டார் சைக்கிளில் கட்டி இழுந்துச் சென்றதன் வாயிலாக, அக்குற்றத்தை புரிந்துள்ளார்.