புக்கிட் மெர்தாஜம், டிச 31- பினாங்கில் பெர்மாதாங் பாவ்வில் பழைய பொருட்களின் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் காயம் அடைந்தனர். அவர்களில் 50 வயதுடைய மியன்மார் பிரஜை ஒருவர் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளானார். உடலில் 70 விழுக்காடு தீக்காயத்திற்கு உள்ளான அந்த ஆடவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அந்த சம்பவத்தில் 30 வயதுடைய பெண் ஒருவரும் காயம் அடைந்தார்.
இத்தீவித்தில் அந்த கிடங்கின் 80 விழுக்காடு அழிந்தது. இரண்டு லோரிகள், மூன்று கார்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிக்களும் அங்கு ஏற்பட்ட தீயில் சேதம் அடைந்தன. இத்தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.