Latestமலேசியா

பினாங்கில் மேக விதைப்பு செயல்முறை தோல்வி

ஜோர்ஜ் டவுன், மார்ச் 1 – அயோர் இத்தாம் நீர் சேமிப்பு அணை மற்றும் தெலுங் பாஹாங் அணைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மேக விதைப்பு செயல்முறைக்குப் பின் மழைப் பதிவு செய்யப்படவில்லை.

செயற்கை மழை பொழிய வைக்கும் இந்த செயல்முறையானது முடிந்த புதன் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுவாகவே ஒரு குறிப்பிட்ட உயரத்தில் மழை மேகங்கள் இருந்தால் மேக விதைப்பு அதிக மழையைத் தூண்டுமாம்.

இந்நிலையில், சாதகமாக இல்லாத வளிமண்டலம் மற்றும் மேக நிலைகளின் காரணமாக இந்நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என பினாங்கு நீர் விநியோக கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி கே.பத்மநாதன் தெரிவித்தார்.

இதனிடையே, மழை பெய்யாததைத் தொடர்ந்து, இரண்டு அணைகளின் கொள்ளளவும் அதிகரிக்கவில்லை என்றும் பதமநாதன் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!