மனிலா, டிசம்பர் 24 – பிலிப்பீன்சில், தன்னை சுற்றி வளைத்த, மூன்று மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பை, 48 வயது ஆடவர் ஒருவர் கடித்து கொன்று உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த போல்ஜூலியோ அலேரியா எனும் அந்நபரை, எங்கிருந்தோ திடீரென தோன்றிய மலைப்பாம்பு வழிமறித்ததாக கூறப்படுகிறது.
மலைபாம்பு கடந்து செல்லும் வரை அலேரியா காத்திருந்த வேளை ; திடீரென அது அவரை சுற்றி வளைக்கத் தொடங்கியுள்ளது.
மலைம்பாம்பின் கூரிய பற்கள் பட்டு, அலேரியாவின் உடலிலிருந்து அதிகமான இரத்த வெளியான போதும், சற்றும் சோர்ந்து போகாமல், அதன் தோல் கிழியும் வரை கடித்ததாக அவர் கூறியுள்ளார்.
அதன் பின்னர் தான் பாம்பின் பிடி தளர்ந்து அவர் உயிர் தப்பினார்.
சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள வீட்டுக்காரர்கள், அலேரியாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வேளை ; அச்சம்பவத்தில் கொல்லப்பட்ட மலைப்பாம்பின் இறைச்சியை, கிராமவாசிகள் தீயில் வறுத்து உண்டதாக கூறப்படுகிறது.