Latestமலேசியா

பீடோர் கேகே மார்ட் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் ; லாலாமூவ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனத்தில் குற்றவாளி தப்பி ஓட்டம்

ஈப்போ, மார்ச் 27 – பேராக், பீடோர், ஜாலான் புருசேயிலுள்ள, கேகே மார்ட் கடையில், பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV இரகசிய கண்காணிப்பு காமிரா பதிவின் வாயிலாக, சம்பந்தப்பட்ட நபர் சிவப்பு லாலாமூவ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த அடர் அல்லது கருமையான நிற வாகனத்தில் தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளதாக, பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.

அக்கார் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, அதிலிருந்து இறங்கிய ஆடவன், சம்பந்தப்பட்ட கேகே மார்ட் கடையை நோக்கி மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பாட்டில் ஒன்றை கடையை நோக்கி வீசுகிறார். அந்த சந்தேக நபர், பின்னர் அதே வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் செல்லும் காட்சிகளை அந்த CCTV பதிவில் காண முடிகிறது.

அச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 427-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படும் வேளை ; சம்பந்தப்பட்ட சந்தேக நபரை அடையாளம் காணும் நடவடிக்கைகளையும் போலீஸ் துரிதப்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!