ஈப்போ, பிப் 2 – பீடோரிலுள்ள தற்காலிக குடிநுழைவு தடுப்பு மையத்தில் நிகழ்ந்த கலவரத்திற்குப் பின் 131 ரோஹிங்ய மற்றும் மியன்மார் கைதிகள் தப்பிச் சென்றனர். மேலும் அவர்களில் ஒருவர் வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 335-ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த விபத்தில் மரணம் அடைந்தார். தப்பியோடிய சந்தேகப் பேர்வழிகளில் 115 Rohinya மக்களும் 16 மியன்மார் பிரஜைகளும் அடங்குவர் என சசுப்ரிடெண்டன்ட் முகமட் நைம் அஸ்னாவி தெரிவித்தார். மாநில போலீஸ் துறையின் குற்றவியல் விசாரணைத்துறை, புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைத்துறை மற்றும் பொது நடவடிக்கை பிரிவின் அதிகாரிகள் தப்பியோடியவர்களை தேடும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக முகமட் நைம் கூறினார்.