பாரிஸ், டிசம்பர் 12 – தீவிர வாய்வால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் 23 வாரம் கர்ப்பமாக இருப்பதோடு மிகவும் விசித்திரமாக அந்த கரு அவரது குடலில் உயிருடன் இருக்கும் அதிசய சம்பவம் பிரான்ஸில் நிகழ்ந்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ரீயூனியன் தீவைச் சேர்ந்த அந்த 37 வயது பெண், பத்து நாட்களாக வயிறு உப்பேசம் மற்றும் வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கு சிகிச்சை பெற பிரான்ஸ் சென்ற போதுதான், அந்த அதிர்ச்சி தகவலை அவர் அறிந்து கொண்டார்.
“ஸ்கேன்” உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் வாயிலாக, அந்த பெண்ணின் வயிற்றுக்கும் குடலுக்கும் இடையே மனித கரு இருப்பது கண்டறியப்பட்டது.
அது போன்ற சம்பவங்களை மருத்துவர்கள் எக்டோபிக் கர்ப்பம் என அழைக்கிறார்கள். கிட்டதட்ட அதுபோல ஆபத்தான இடத்தில் உருவாகும் அனைத்து குழந்தைகளும் இறந்து விடுவதும் வழக்கமாகும்.
எனினும், சம்பந்தப்பட்ட பெண் 29-வது வாரத்தில் குழந்தையை பாதுகாப்பாக பிரசவித்த வேளை ; மூன்று வாரங்களில் அவரும் அவரது குழந்தையும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
இது மருத்துவ உலகில் மிகவும் விசித்திரமான சம்பவமாகப் பார்க்கப்படுகிறது.