Latestமலேசியா

பெர்சத்து தலைவர் பதவியை தற்காக்கப் போவதாக முஹிடின் யாசின் திடீர் முடிவு

ஷா அலாம், நவ 26 – அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பெர்சத்து கட்சித் தேர்தலில் தலைவர் பதவியை தற்காக்கப்போவதில்லையென வெள்ளிக்கிழமை அறிவித்திருந்த டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தமது துணைவியார் கேட்டுக்கொண்டதால் அந்த முடிவை மாற்றிக்கொண்டதாக அறிவித்திருக்கிறார்.

பெர்சத்து தலைவர் பதவியை தாம் தற்காக்கப் போவதாக முன்னாள் பிரதமருமான முஹிடின் யாசின் தெரிவித்திருக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் கட்சி தேர்தலில் வாக்குகளை திரட்டுவதற்கு ஒரு வித்தையாக தொடக்கத்தில் போட்டியிடவில்லை என்று தமது முடிவு இருந்ததாக கூறப்படுவதை அவர் மறுத்தார்.

கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகும் தமது முடிவை நிரகரிப்பது என பெர்சத்து பேராளர் மாநாடு தீர்மானம் நிறைவேற்றியதை தொடர்ந்து அவர்களது முடிவை மதிப்பதாக கட்சியின் 6ஆவது பேராளர் கூட்டத்தின் முடிவில் உரையாற்றியபோது முஹிடின் தெரிவித்தார். தீவிர ஆலோசனைக்குப் பிறகே தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுத்தாகவும் ஆனால், அந்த முடிவை ஒட்டு மொத்த பேராளர்களும் நிரகாரித்ததால் அவர்களைது முடிவை மதித்து தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிப்பதற்கு முன்வந்ததாக முஹிடின் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!