கோலாலம்பூர், மார்ச்-20, செவ்வாய்க்கிழமை பெர்லிசும் கெடாவின் பொக்கோ செனாவும் இரண்டாம் கட்ட வெப்ப அலையைப் பதிவுச் செய்திருப்பதாக மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறை Met Malaysia தெரிவித்திருக்கிறது.
இரண்டாம் கட்ட வெப்ப அலை என்பது, குறிப்பிட்ட ஒரு பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 40 பாகை செல்சியஸ் வரை பதிவாவதைக் குறிக்கிறது.
இவ்வேளையில், நேற்று தீபகற்ப மலேசியாவில் 26 இடங்கள் முதல் கட்ட வெப்ப அலை எச்சரிக்கையின் கீழ் வைக்கப்பட்டன.
கெடாவில் லங்காவி, குபாங் பாசு, பாடாங் தெராப், சீக், பாலிங், குவாலா மூடா, பெண்டாங், கோத்தா ஸ்டார், வடகிழக்கு பினாங்கு, பேராக்கில் கம்பார், குவாலா கங்சார், மற்றும் கிந்தா உள்ளிட்ட பகுதிகள் அவற்றில் அடங்கும்.
அதோடு, பஹாங்கில் பெந்தோங், ரவூப், தெமர்லோ,
சிலாங்கூரில் செப்பாங் மற்றும் குவாலா சிலாங்கூர்,
புத்ரா ஜெயா, நெகிரி செம்பிலானில் ஜெலபு, ரெம்பாவ், தம்பின், மலாக்காவில் அலோர் காஜா, ஜொகூரில் சிகாமாட், மூவார், பத்து பஹாட், சபாவில் கோத்தா பெலுட் ஆகியவையும் முதல் கட்ட வெப்ப அலைப் பட்டியலில் வைக்கப்பட்டன.
அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 37 பாகை செல்சியசாக தொடர்ந்தாற் போல மூன்று நாட்களுக்கு பதிவானால், அப்பகுதிக்கு Met Malaysia முதல் கட்ட வெப்ப அலை எச்சரிக்கையை விடுக்கும்.