Latestமலேசியா

மனைவி கொலை, கணவர் மீது குற்றச்சாட்டு

கிள்ளான், ஜூன் 14 – தனது  மனைவியை  கொலை செய்ததாக   லோரி ஓட்டுனரான  31 வயதுடைய  சூரிய ராஜ்  (  Suria Raj )  மீது    மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.  கழுத்து   மற்றும்  வலது கையில் கத்திக் குத்துக்கு உள்ளான நிலையில்  28  வயதான  (Kirshashini)    ஜாலான்  பால்மா,  பண்டார் போட்டானிக்கிலுள்ள (  Jalan  Palma ,  Bandar Potanik )    அடுக்கு மாடி வீட்டின் படுக்கை அறையில் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தார்.  இதனை தொடர்ந்து அன்றைய தினமே  அவரது கணவரான  சூரிய ராஜ் கைது செய்யப்பட்டார்.  

காலை மணி  6.30க்கும்   7மணிக்குமிடையே   சூரிய ராஜ்  இந்த குற்றத்தை  புரிந்ததாக  குற்றஞ்சாட்டப்பட்டது.  மாஜிஸ்திரேட்   சித்தி   சுபைடா மஹாட்  (  Siti   Zubaidah Mahat )  முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதனை புரிந்து கொண்டதற்கு   அடையாளமாக சூரிய ராஜ் தலையசைத்தார். 

குற்றவாளி என நிருபிக்கப்பட்டால்  மரண தண்டனை அல்லது  40 ஆண்டுகள்வரை சிறை  மற்றும்   12  பிரம்படிகள்   ஆகியவை விதிக்கப்படும். குற்றவியல் சட்டத்தின்  302ஆவது விதியின் கீழ் சூரிய ராஜ் மீது குற்றஞ்சாட்டப்பட்து.  இந்த குற்றச்சாட்டு  மீண்டும்  செப்டம்பர்  3ஆம் தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!