கோலாலம்பூர், மே 17 – சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை மலேசியாவுக்கு வருகை புரியுமாறு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.
லாரன்ஸை வேற்று தொலைப்பேசி வாயிலாக தொடர்புக் கொண்ட அன்வார், சிங்கப்பூரின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவரை மலேசியாவிற்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.
அதே சமயம், கடந்த வாரம் நடைபெற்ற கோலா குபு பாரு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஒற்றுமை அரசாங்க வேட்பாளருக்கும் லாரன்ஸ் வாழ்த்து தெரிவித்ததாக அன்வார் சொன்னார்.
இரு நாடுகளின் பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்களில் தொடர்ந்து ஒத்துழைக்கவும் நெருக்கமாக பணியாற்றவும் அந்த உரையாடலின் போது தாங்கள் ஒப்புக்கொண்டதாக, பிரதமர் தனது முகநூல் பதிவு வாயிலாக பகிர்துள்ளார்.
ஏறக்குறைய 20 ஆண்டுகளாக சிங்கப்பூர் பிரதமராக லீ சியென் லூங் பொறுப்பேற்றிருந்த வேளை ; அந்நாட்டின் புதிய பிரதமராக நேற்று முன் தினம் லாரன்ஸ் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.