பெர்லின், மார்ச் 14 – மலேசியாவில் முதலீடு செய்வதற்கு முன்வரும்படி ஜெர்மன் நிறுவனங்கள் மற்றும் ஐரோப்பாவிலுள்ள வர்த்தக சமூகத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.
மலேசியாவில் தொழில் திறன் பெற்ற தொழிலாளர்கள் இருப்பதோடு, நவீன மயமான அடிப்படை வசதிகள், தெளிவான சுற்றுப்புற கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சிக்கான அதிக வாய்ப்புகளை கொண்டிருப்பதாக அன்வார் தெரிவித்தார்.
21 ஆம் நூற்றாண்டுக்கான ஆக்கப்பூர்வமான பொருளாதார ஆற்றலை நாங்கள் கொண்டிருப்பதால் வர்த்தகத்துறையில் ஜெர்மன் வர்ரதக்கத்திற்கு சரியான பங்காளியாக மலேசியா திகழமுடியும் என SME தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றியபோது அன்வார் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சுமார் 5,000 சிறிய நடுத்தர தொரில்துறையினரும் , அரசாங்க மற்றும் தொழில் நிபுணர்களும் கலந்துகொண்டனர்.