Latestமலேசியா

மலேசியாவில் வேலை செய்வதற்காக RM 21,700 ரிங்கிட் வழங்கியும் 100க்கும் மேற்பட்ட வங்காளதேசிகள் செராஸில் வேலையின்றி அவதி

கோலாலம்பூர், பிப் 25 – மலேசியாவில் வேலை செய்வதற்காக ஒவ்வொருவரும் RM 21,700 ரிங்கிட் வழங்கியும் 100க்கும் மேற்பட்ட வங்காளதேசிகள் செராஸில் வேலையின்றி தவிக்கின்றனர் என குடிநுழைவு தொழிலாளர் உரிமைக்கான நடவடிக்கையாளர் எண்டி ஹால் தெரிவித்திருக்கிறார்.

104 தொழிலாளர்கள் வேலை தேடித்தரும் நிறுவனத்திற்கு RM19,500 ரிங்கிட்டிற்கும் 21,700 ரிங்கிட்டுக்குமிடையே கட்டணம் வழங்கியிருப்பதாக எண்டி ஹால் கூறினார்.

கூடுதல் வருமானத்தை கொண்ட வேலை வாய்ப்பும் தங்குவதற்கான வசதியும் வழங்குவதற்கான வாக்குறுதியும் அவர்களுக்கு வழங்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

செராசிலுள்ள குத்தகை நிறுவனம் ஒன்று அவர்களை வேலைக்கு சேர்ந்துள்ளது. அந்த தொழிலாளர்கள் இங்கு வந்து சேர்ந்ததும் அவர்களது கடப்பிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு அவர்களை விமான நிலையத்தில் ஏற்றிய நபரிடமிருந்து தாம் கொலை மிரட்டலுக்கு உள்ளானதாகவும் பாதிக்கப்பட்ட ஆடவர் ஒருவர் தெரிவித்திருப்பதாக எண்டி ஹால் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!