ஹம்பர்க், மார்ச் 16 – மலேசியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்களுக்கிடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த சுயேச்சை வர்த்தக உடன்பாட்டை செய்து கொள்வதற்காக கலந்துரையாடலை நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
சுயேச்சை வர்த்தக உடன்பாட்டின் மூலம் ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கான நுழைவாயிலாக மலேசியாவை பயன்படுத்த முடியும் என ஹாம்பர்க் சிட்டி ஹாலில் நடைபெற்ற பொருளாதாரம், அரசியல் மற்றும அரசதந்திர நிபுணர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் உரையாற்றியபோது அன்வார் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக சுயேச்சை வர்த்தக உடன்பாடு குறித்து அன்வாரும் ஜெர்மன் துணைவேந்தர் ராபர்ட் ஹேபெக் க்கும் விவாதித்தனர்.
நாங்கள் FTA ஐ எளிதாக்குவோம் என்பதோடு ஆசியாவில் முன்னணி பொருளாதார கொண்ட நாடாக வருவதற்கான கடப்பாட்டையும் மலேசியா கொண்டுள்ளதாக நிதியமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.
முழுமையான மற்றும் நிடித்த மேம்பாட்டை ஆசியா கொண்டிருக்க முடியும் என அவர் கூறினார். 2030ஆம் ஆண்டிற்கான புதிய தொழில்மய பெருந்திட்டம் மலேசியாவை தொழில் மயமாக்குவதற்கான புத்துணர்வை கொண்டுவரும் என்றும் அன்வார் தெரிவித்தார்.
சுயேச்சை வர்த்தக உடன்பாட்டின் மூலம் திறந்த சந்தைக் கொள்கைகளை ஐரோப்பா பயன்படுத்த முடியும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.