புத்ரா ஜெயா, நவ 5 – இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் இங்கு வருகை புரிந்திருக்கும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா மரியாதை நிமித்தமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்தார்.
இன்று காலை மணி 10 அளவில் ஸ்ரீ பெர்டானா வந்தடைந்த கிஷிடாவை அன்வார் வரவேற்றதோடு பொருளாதார அமைச்சர் ராபிஜி ரம்லி, தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சரவை உறுப்பினர்களையும் ஜப்பானிய பிரதமருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
வர்த்தகம்,முதலீடு, கல்வி, தற்காப்பு, சுற்றுச் சூழல், எரிபொருள், பாதுகாப்பு, தகவல் மற்றும் தொடர்பு இலக்கியல் விவாகரங்கள் குறித்தும் ஜப்பான் மற்றும் மலேசிய பிரதமர்கள் பேச்சு நடத்தினர்.