Latestமலேசியா

மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததற்காகச் சிரம்பானில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கைது

சிரம்பான், டிசம்பர் 13 – சிரம்பானில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றின் 43 வயது ஆண் கவுன்செலிங் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களை உடல் ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் புகார் அளித்ததை அடுத்து தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆடவர் விசாரணைக்கு உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதை சிரம்பான் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் அரிபாய் தாராவே உறுதிப்படுத்தினார்.

அந்த ஆடவன் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சம்பந்தபட்ட ஆபாச காணொளிகளை அனுப்பியதகாவும், அவனது தொலைபேசியில் இதுபோன்ற தகவல்களை போலீசார் கண்டுபித்ததாகவும் நம்பப்படுகிறது.

எனினும், எத்தனை மாணவர்கள் அந்த ஆடவனால் பாதிக்கப்பட்டனர் என்பது வெளியிடப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!