குவந்தான், டிச 6 – மாரானில் கம்போங் செரெங்காமில் புலி நடமாட்டம் இருப்பது குறித்து தகவல் கிடைத்துள்ளதாக பகாங் வனவிலங்கு பூங்காத்துறை தெரிவித்துள்ளது. அந்த கிராமத்திலுள்ள பத்து சவாவ் என்னுமிடத்திற்கு அருகே பகாங் ஆற்றோரத்தில் புலி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்ததை சில மீனவர்கள் கண்டதாக பகாங் வனவிலங்கு பூங்காத்துறையின் இயக்குனர் ரோஸிடான் முகமட் யாசின் தெரிவித்தார். அந்த புலி தற்போது அருகேயுள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் நுழைந்திருக்கலாம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதே வேளையில் புலி நடமாட்டம் காணப்பட்ட இடத்திலுள்ள கிராம மக்கள் மற்றும் அவர்களது கால்நடைகளின் பாதுகாப்பில் கவனமாக இருக்கும்படி ரோஸிடான் கேட்டுக் கொண்டார். செம்பனை தோட்டத்தில் புலி காணப்பட்டதாக வெளியாகியுள்ள காணொளி குறித்து வினவப்பட்டபோது மாராங்கில் காணப்பட்டதாக கூறப்படும் புலிக்கும் அந்த காணொளியில் காணப்படும் புலிக்கும் தொடர்பு இல்லையென்று ரோஸிடான் கூறினார்.
Related Articles
இணையம் வாயிலான கார் விற்பனை மோசடியில் 41 ஆயிரம் ரிங்கிட்டை பறிகொடுத்தது போக, கொலை மிரட்டலுக்கும் ஆளான பஹாவ் ஆடவர்
10 hours ago
நாய் கடித்த ஆடவருக்கு சிகிச்சையளிப்பதில் தாமதம்? சுல்தானா அமீனா மருத்துவமனை தன்னிலை விளக்கம்
10 hours ago