சுங்கைப்பட்டாணி, நவ 29 – மாற்றுத் திறனாளியான தமது இளைய சகோதரிக்கு மரணம் விளைவித்ததாக மருந்தக உதவியாளரான பெண்மணி ஒருவர் மீது சுங்கைப் பட்டாணி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் கைரத்துல் அனிமா ஜெலானி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 36 வயதுடைய நூர் சுஹைடா முகமட் சானி அதனை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக தலையசைத்தார். நவம்பர் 20 ஆம் தேதி ப்ரீமா புத்ரி ஜயாவிலுள்ள தமது வீட்டில் 29 வயதுடைய நூர் ஃபாதின் என்ற தமது சகோதரிக்கு மரணம் விளைவித்தாக குற்றவியல் சட்டத்தின் 302ஆவது விதியின் கீழ் நூர் சுஹைடா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. நூர் சுஹைடாவுக்கு ஜாமின் வழங்கப்படவில்லை.