செமினி, நவ 5 – உலு லாங்காட் நாடாளுமன்றத் தொகுதிக்கு வழங்கப்பட்ட மித்ரா நிதியின் மூலம் நடைபெற்ற இரண்டு நாள் பயிற்சி திட்டத்தில் அடிப்படை ட்ரொன் ‘Drone’ செயல்படுத்தும் திட்டம் மற்றும் காணொளி தொகுப்பாக்கம் செமினி சமூக மண்டபத்தில் நடைபெற்றதாக உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சானி ஹாம்சானின் சிறப்பு அதிகாரியும் பி.கே.ஆர். உலு லாங்காட் தொகுதித் தலைவருமான இராஜன் முனுசாமி தெரிவித்தார்.
இப்பயிற்சித் திட்டத்தில் ஆண்-பெண் என 30 பேர் கலந்து கொண்டதோடு நிபுணத்துவ முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அனைத்து இடங்களிலும் ட்ரொனை பயன்படுத்த முடியாது என்பதால் அதற்கு முறையான உரிமத்தை எங்கு பெறலாம் என்பதற்கான விளக்கமளிப்பும் வழங்கப்பட்டது.
அதே போல் Drone காணொளி சம்பந்தப்பட்டதாக இருப்பதால் இதில் காணொளிக்கானப் அடிப்படைப் பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டது. இதில் காணொளியை எப்படிக் கையாள்வது என்பது பற்றியும் கற்றுக் கொடுக்கப்பட்டது. இன்றைய இளம் தலைமுறையினர் புகைப்படம் எடுக்க கேமராவுக்கு பதிலாகக் கைப்பேசியைப் பயன்படுத்தி வருகின்றனர். கைப்பேசியில் எவ்வாறு தரமானக் காணொளியைப் பதிவுச் செய்வது என்பது பற்றி இப்பயிற்சியை வழிநடத்திய விஸ்வநாதன் விளக்கமளித்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 30 பேருக்கும் ட்ரோனை முகமட் சானி ஹாம்சான் வழங்கி கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து நிறைவு செய்தார். இந்நிகழ்வின் கலந்துகொண்ட காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் ராமச்சந்திரன் அர்ச்சுனன், உட்பட அனைவருக்கும் முகமட் சானி ஹம்சான் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.