கோலாலம்பூர் , ஜன 1 – சுங்கை வேய்யில் உள்ள தீர்வையற்ற வர்த்தக தொழில்மய பகுதியில் நேற்று மாலை மின்சார விநியோக்கும் அறை தீப்பிடித்து எரிந்தது.
இதனால், கூட்டரசு நெடுஞ்சாலையில் பெரிய புகை மூட்டத்தையும் காண முடிந்தது. இச்சம்பவத்தில் நான்கு குத்தகை தொழிலாளர்கள் கையில் தீக்காயத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஃபக்ருதீன் அப்துல் ஹமீது தெரிவித்தார்.
அவர்களது நிலைமை சீராக இருப்பதாக அவர் கூறினார்.
சுங்கை வேய், ஜாலான் எஸ்.எஸ். 8/1 கட்டிடங்களுக்கு அருகேயுள்ள அந்த மின்சார விநியோக அறையில் நேற்று மாலை மணி 5.53 அளவில் தீப்பற்றியதை அங்கு விரைந்த மூன்று தீயணைப்பு வண்டிகளைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் 44 நிமிடங்களில் தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் 400 சதுர அடி மின் ட்ரான்ஸ்போர்மேர் ‘ Transformer’ அறை முழுமையாக அழிந்தது.