Latestமலேசியா

மின்சார தடை; புத்ராஜெயா IOI சிட்டி மால் இருளில் மூழ்கியது

புத்ராஜெயா, மார்ச் 28 – ஹரி ராயாவை முன்னிட்டு, பொருட்களை வாங்க புத்ராஜெயாவிலுள்ள, IOI சிட்டி பேரங்காடிக்கு சென்ற பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மின் தடை காரணமாக இன்று அந்த பேரங்காடி தற்காலிகமாக மூடப்பட்டதே அதற்கு காரணம் ஆகும்.

அச்சம்பவம் குறித்து, அங்கு பொருட்கள் விற்பனை முகப்பை வைத்திருக்கும் சிடேவா என்பவர், தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

மின் தடை காரணமாக, அந்த பேரங்காடியில் அமைந்திருக்கும் தமது விற்பனை முகப்பை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, IOI நிர்வாகத்தால், இன்று காலை அந்த பேரங்காடி மூடப்படுவதாக அறிவித்து ஒட்டப்பட்டிருக்கும் அறிவிப்பையும் அவர் தனது பதிவில் இணைத்துள்ளார்.

இவ்வேளையில், TNB மின்சார வாரிய பணியாளர்கள், பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று மாலை ஐந்து மணிக்கும் அங்கு மின் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்புமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!