கோலாலம்பூர் , ஜூன் 28 – போலீஸ் படையின் முன்னாள் தலைவர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பாலர் பள்ளியின் முன்னாள் ஆசிரியை M. இந்திரா காந்தி தொடுத்திருந்த வழக்கை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுடி செய்தது. இஸ்லாமிய சமயத்தை தழுவிய தனது முன்னாள் கணவரான கே. பத்மநாதன் ( Pathmanathan ) எனப்படும் Muhamad Riduan Abdullah வை கண்டுப்பிடித்து, 2008ஆம் ஆண்டு அவரால் கடத்திச் செல்லப்பட்ட தனது மகளை ஒப்படைக்கும்படி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தத் தவறியதற்காக முன்னாள் ஐ.ஜி.பி அப்துல் ஹமிட் படோர் ( Abdul Hamid Bador ) , இதர அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இந்திரா காந்தி வழக்கு தொடுத்திருந்தார்.
Balace of probabilities எனப்படும் சட்டப்பூர்வ சிவில் அம்சங்களை நிருபிப்பதற்கு வாதி தவறிவிட்டார் என்பதால் அவரது வழக்கு மனுவை தள்ளுபடி செய்வதாக நீதித்துறை ஆணையர் ராஜா அகமட் மோஷானுடின் ( Raja Ahmad Mohzanuddin Shah Raja Mohzan ) தீர்ப்பளித்தார். தனது வழக்கு மனுவில் அரசாங்க பணியாளர்களுக்கு எதிராக கூறியிருந்த கூற்று தவறானது என்பதோடு அதனை இந்திரா காந்தி நிருபிக்க தவறிவிட்டார் என்தால் இந்த வழக்கு மனுவை நிராகரிப்பதாக நீதித்துறை ஆணையர் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.