புதுடில்லி, மார்ச் 28 – மூளையில் அவசர அறுவை சிகிக்சை செய்த பின் டில்லி மருத்துவமனையில்ருந்து Sadhguru வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டார். பல வாரங்களாக கடுமையாக தலைவலியினால் அவதியுற்று வந்ததைத் தொடர்ந்து சத்குருவுக்கு மார்ச் 17ஆம்தேதி மூளையில் அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உயிருக்கு மிரட்டலை ஏற்படுத்தக்கூடிய மூளை ரத்தக் கசிவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் வினித் சூரியின் ஆலோசனையின் பேரில் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இஷா அறநிறுவனத்தின் தோற்றுவிப்பாளருமான Sadhguru Jaggi Vasudev மருத்துவமனையிலிருந்து வெளியேறும் காணொளியை பி.டி.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டது. நீண்ட காலமாக தமக்கு இருந்துவந்த தலைவலியை பொருட்படுத்தாமல் இருந்து வந்ததாகவும் ஆனால் நிலைமை மோசமானதால் வேறு வழியின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு முன்வந்ததாக சத்குரு தெரிவித்தார். அறுவை சிகிக்சைக்குப் பிறகு குறிப்பிட்டத்தக்க முன்னேற்றத்தை அவர் வெளிப்படுத்தியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மனவுறுதியின் காரணத்தினாலேயே அறுவை சிகிக்சைக்குப் பின் விரைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.