Latestமலேசியா

மெர்சடிஸ் காரில் தீ; ஓட்டுநரும் பயணியும் உயிர் தப்பினர்

கூருன், பிப்ரவரி -19 கெடா, கூருன் அருகே வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 82-வது கிலோ மீட்டரில் சாலையோரமாக ஆடம்பர காரொன்று தீப்பற்றியதில், அதன் ஓட்டுநரும் பயணியும் பதறிப் போயினர்.

சம்பவத்தின் போது, நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த அக்காரில் இருந்து திடீரென புகை வருவதை அவர்கள் கவனத்திருக்கின்றனர். உடனடியாகக் காரைச் சாலையோரமாக நிறுத்தி விட்டு, கார் முழுவதுமாக தீப்பற்றும் முன்பாக உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இருவரும் ஓட்டம் பிடித்தனர்.

மெர்சடிஸ் பென்ஸ் காரொன்று கிட்டத்தட்ட 90 விழுக்காடு எரிந்து போனதாகக் கூறி நேற்று பிற்பகல் 3.18 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக, குவார் செம்பெடாக் தீயணைப்பு மீட்புத் துறைத் தலைவர் முஹமட் ஃபாவுசி ரசாலி தெரிவித்தார்.

காரில் ஏற்பட்ட தீ மாலை 4 மணி வாக்கில் முழுவதுமாக அணைக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!