லங்காவி, பிப்ரவரி 20 -லங்காவியில் நங்கூரமிட்டிருந்த பாய்மரக் கப்பலொன்று இன்று தீயில் சேதமடைந்ததில், அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
மதியம் 1.19 மணியளவில் தகவல் கிடைத்ததும், அறுவர் கொண்ட குழு சம்பவ இடம் விரைந்ததாக, கெடா தீயணைப்பு மீட்புத் துறையின் நான்காம் மண்டல தலைவர் முஹமட் ஜாம்ரி அப்துல் கானி தெரிவித்தார்.
திறந்தவெளி நீர் ஆதாரத்தைக் கொண்டு தண்ணீரைப் பாய்ச்சி சுமார் 20 நிமிடங்களில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக அவர் மேலும் சொன்னார்.
கடலோரத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் ஏற்பட்ட அத்தீயில் அக்கப்பலில் உள்பகுதியில் 50 விழுக்காடு சேதமடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.