கோலாலம்பூர், மார்ச் 4 – மலாய் ஆட்சியாளர்கள் மற்றும் இதர சில தரப்பினரை சாடி வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பாஸ் கட்சியின் தலைவர் Abdul Hadi Awang கை சிறப்பு போலீஸ் குழு விசாரணை செய்து வருவதாக டத்தோஸ்ரீ Saifuddin Nasution Ismail தெரிவித்தார். 3 R எனப்படும் இனம், சமயம் மற்றும் அரச அமைப்பு தொடர்பான விவகாரங்களை கவனித்துவரும் சிறப்பு போலீஸ் விசாரணைக்குழு ஹடி அவாங் மீதான விசாரணையை மேற்கொண்டு வருவதாக உள்துறை அமைச்சருமான Saifuddin கூறினார்.
அவசரமாக இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏழு நாட்களுக்குள் விசாரணையை முடித்து அதன் விசாரணை அறிக்கையை சட்டத்துறையை தலைவருக்கு அனுப்பி வைக்கும்படி அந்த குழு கேட்டுக்கொண்டிருப்பதாக Rumah Seri Kenangan கிற்கு வருகை புரிந்தபோது Saifuddin தெரிவித்தார். குறிப்பிட்ட சில விவகாரங்களை மட்டுமே தாம் தெரிவிப்பதாகவும் விசாரணையில் தலையிடப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே ஹடி அவாங்கிடம் நாளை செவ்வாய்க்கிழமை வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என போலீஸ் படைத் தலைவர் Tan Sri Razarudin Husain இன்று தெரிவித்தார். நாளை பிற்பல் மணி 2.30 அளவில் Jalan Raja Laut டிலுள்ள பாஸ் தலைமையகத்திற்கு ஹடி அவாங்கை சந்திப்பதற்கு விசாரணை அதிகாரிகள் செல்வார்கள். அவரது உடல் நலம் குறித்து அவரது அதிகாரி எங்களிடம் தெரிவித்துள்ளார். அவரிடம் நாளை வாக்குமூலம் பதிவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நிந்தனை மற்றும் இணைய வசதிகளை தவறுதலாக பயன்படுத்தியது தொடர்பில் ஹடி அவாங் மீது விசாரணை நடத்தப்படுவதாக Razaruddin தெரிவித்தார்.