Latestஇந்தியாஉலகம்

வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை இந்தியா காலவரையின்றி நீட்டித்துள்ளது

மும்பை, மார்ச் 24 – வெங்காய ஏற்றுமதி மீதான தடையை இந்தியா காலவரையின்றி நீட்டித்துள்ளது. இது ஒரு ஆச்சரியமான குறிப்பாக இந்திய பொதுத் தேர்தலுக்கு முன்னதாக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையினால் வெளிநாட்டு சந்தைகளில் வெங்காய விலைகள் உயர்வதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய வெங்காய ஏற்றுமதியாளரான இந்தியாவால் வெங்காயத்திற்கு டிசம்பர் மாதம் விதிக்கப்பட்ட தடை மார்ச் 31-ம் தேதியுடன் காலாவதியாக இருந்தது. ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து உள்நாட்ல் வெங்காயத்தின் விலை பாதியாகக் குறைந்ததோடு , இந்த பருவ காலத்தில் விளைச்சல் அதிகரித்ததால் வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என்று வர்த்தகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் வெள்ளிக்கிழமையன்று இந்த தடையை அடுத்த அறிவிப்புவரும்வரை நீட்டிப்பதாக இந்திய அரசாங்கம் அறிவித்தது. இந்த தடை நீட்டிக்கப்பட்டது தேவையற்றது என்பதோடு புதிய பருவ காலத்தில் வெங்காய விளைச்சல் அதிகரித்திருப்பதால் அதன் கூடுதலான விநியோகம் விலையில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என மும்பையை தளமாகக் கொண்ட ஏற்றுமதி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!