கோலாலம்பூர், ஜன 1 – மூன்று மாநிலங்களில் உள்ள 16 நிவாரண மையங்களில் தற்போது 1,675 வெள்ள அகதிகள் மட்டுமே தங்கியிருப்பதாக தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனமான நட்மா தெரிவித்திருக்கிறது.
கிளந்தானில், வெள்ளத்தினால் நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1,587 ஆக குறைந்துள்ளது. பாசிர் மாஸ், தும்பாட் மற்றும் குவாலா கிராயிலுள்ள 12 நிவாரண மையங்களில் அவர்கள் தங்கியுள்ளனர்.
பஹாங்கில் மாரான்னில் இருக்கும் நிவாரண மையத்தில் 34 பேர் மட்டுமே இருந்து வருகின்றனர். கேமரன் மலையில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட 87 பேர் நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்.
ஜோகூரில் சிகாமட்டில் எஞ்சியுள்ள இரண்டு நிவாரண மையங்களில் இன்னமும் 54 பேர் தங்கியுள்ளனர். வெள்ளம், பாலங்கள் சேதமடைந்தது மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக 35 சாலைகள் இன்னமும் மூடப்பட்டுள்ளதாக நட்மா தெரிவித்துள்ளது.