
கோலாலம்பூர், பிப்ரவரி 4 – கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி அன்று நடந்த விபத்தில் தனது மனைவி உயிரிழந்ததைத் தொடர்ந்து, விபத்து இடத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் அவருடைய கைப்பேசி மற்றும் தனிப்பட்ட பொருட்களை திருப்பி வழங்குமாறு அப்பெண்ணின் கணவர் பொதுமக்களிடம் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.
முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அந்த நபர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், தங்க நிற iPhone 11 Pro Max கைப்பேசியும், உயிரிழந்த மனைவியின் பிற பொருட்களும் யாரிடமாவது இருந்தால் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளார். அந்த கைப்பேசியில் குடும்பத்திற்கான மதிப்பற்ற நினைவுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Nor Suhaila Shariff எனும் அப்பெண், பாகான் டத்துக் பகுதியில், Federal Route 5 சாலையில் தெற்கு திசை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு நேரத்தில் விபத்தில் உயிரிழந்தார்.
மேலும், அந்த விபத்து தொடர்பான டாஷ்கேம் காணொளிகள் யாரிடமாவது இருந்தால், அவற்றையும் பகிர்ந்து கொள்ளுமாறும் அவரது கணவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.



