Latestமலேசியா

1 மில்லியன் ரிங்கிட் போலி பண கோரிக்கை நிறுவன இயக்குநர் கைது

கோலாலம்பூர், மார்ச் 6 – எண்ணெய் பரமாரிப்பு, குழாய் பொருத்துதல் மற்றும் சி.சி.டி.வி பணிகள் தொடர்பில் 1 மில்லியன் ரிங்கிட் போலி பண கோரிக்கையை சமர்ப்பித்தது தொடர்பில் நிறுவன இயக்குனர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC கைது செய்தது. 50 வயதுக்குட்பட்ட அந்த ஆடவர் நேற்றிரவு 7.30 மணியளவில் விசாரணைக்காக புத்ரா ஜெயாவிலுள்ள MACC தலைமையத்திற்கு வந்தபோது கைது செய்யப்பட்டார். அந்த ஆடவரை சனிக்கிழமைவரை தடுத்துவைக்கும் உத்தரவுக்கு புத்ரா ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. இதனிடையே அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதை MACC சிறப்பு நடவடிக்கை பிரிவின் இயக்குனர் Azmi Kamaruzaman உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!