Latestஉலகம்

140 பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்த கேரளா பெண்

கேரளா, ஜன 8 – துபாயில் நடைபெற்ற பருவநிலை தொடர்பான இசை நிகழ்ச்சியில் 140 மொழிகளில் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த சுஜீதா சதிஷ்.

பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த வருடம் நவம்பவர் மாதத்தில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் அவர் பாடியிருக்கின்றார்.

அவர் அப்பாடல்களை 9 மணி நேரத்தில் பாடி அசத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து, 140 மொழிகளில் பாடியதற்காக அவருக்கு கின்னஸ் சாதனை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, சமூக வலைத்தளத்தில் அவரின் பாடல் காணொளியும் சாதனையும் பகிரப்பட்டு வரும் நிலையில் பலரும் அவருக்குப் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!