![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-24-Nov-2023-04-56-PM-9623.jpg)
சுபாங் ஜெயா, நவம்பர் 24 – சிக்கலில் உள்ள MyAirline விமான நிறுவனம், தனது 158 பணியாளர்களுக்கு சுமார் 43 லட்சம் ரிங்கிட்டை சம்பளமாக வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
ஆட்பலத் துறையின் உத்தரவுக்குப் பின்னர் அந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக, MTUC – மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் பொதுச் செயலாளர் கமருல் பஹாரின் மன்சோர் தெரிவித்தார்.
ஆட்பலத் துறையிடம், தங்கள் உரிமைகோரல்களை தாக்கல் செய்த MyAirline விமான நிறுவனத்தின் விமானிகள், விமான பணியாளர்கள் உட்பட இதர தொழிலாளர்களும் அந்த தொகையை பெறுவார்கள்.
அதனால், இன்னும் ஆட்பலத் துறையிடம் விண்ணப்பம் செய்யாத MyAirline நிறுவனத்தின் எஞ்சிய பணியாளர்கள் விரைந்து தங்கள் கோரிக்கையை முன் வைக்குமாறும் கமருல் கேட்டுக் கொண்டார்.
அருகிலுள்ள ஆட்பலத் துறை அலுவலகத்தில் அவர்கள் அந்த விண்ணப்பத்தை ஒப்படைக்கலாம்.