கிள்ளான், ஜன 19 – போர்ட் கிள்ளானுக்கு அருகே அனுமதிக்கப்பட்ட கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 17 ஆடம்பரக் கார்களுடன் உயர் இயந்திர ஆற்றலைக் கொண்ட மோட்டார் சைக்கிள்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் செய்தனர். சிலாங்கூர் மத்திய மண்டல சுங்கப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் ஆடி, போர்ஸ் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் வகைகளைக் கொண்ட கார்களுடன் 10 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கார்கள் அனைத்தும் ஜப்பான் மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும். சுங்கத்துறை சட்டத்தின்படி இறக்குமதி செய்யப்ட்ட வாகனங்களையும் மோட்டார் சைக்கிள்களையும் அனுமதிக்கப்பட்ட கிடங்கில் 48 மாதங்கள் மட்டுமே வைத்திருக்க முடியும். இந்த வாகனங்களுக்கான சுங்க வரி 803,000 ரிங்கிட்டாகும். பறிமுதல் செய்யப்பட்ட அந்த வாகனங்களின் மொத்த மதிப்பு 750,000 ரிங்கிட்டாகும் என சிலாங்கூர் சுங்கத்துறையின் இயக்குனர் நோர்லேலா இஸ்மாயில் தெரிவித்தார்.