Latestமலேசியா

2024ஆம் ஆண்டின் கணினி பாதுகாப்பு மாசோதாவை மேலவை நிறைவேற்றியது

கோலாலம்பூர், ஏப் 4 – இலக்கவியல் அமைச்சர் Gobind Sing Deo வின் மூன்றாவது வாசிப்புக்குப் பிறகு மேலவை நேற்று 2024ஆம் ஆண்டு கணினி பாதுகாப்பு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியது. கணினி பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நிர்வகிப்பதில் குறிப்பிட்ட நடவடிக்கைகள், தரநிலைகள் மற்றும் செயல்முறைகளுக்கு இணங்குவதன் மூலம் நாட்டின் இணைய பாதுகாப்பை மேம்படுத்துவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.

​​இணைய பாதுகாப்பு சம்பவங்களைக் கையாள்வதில் முக்கியமான (CNII ) தேசிய தகவல் உள்கட்டமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதிப்படுத்த இந்த மசோதா அரசாங்கத்திற்கு உதவும் என்று இதற்கு இந்த மசோதா மீதான விவாதத்தை முடித்துவைத்து பேசியபோது Gobind Singh தெரிவித்தார். CNII துறையானது அரசாங்கம், வங்கி மற்றும் நிதி, போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு, அத்துடன் தகவல், தொடர்பு மற்றும் இலக்கவியல் துறைகளை உள்ளடக்கியதாக இருப்பதால், அவை பொதுவாக அரசாங்கத்தை முடக்குவதற்கு இணைய தாக்குதல்களில் இலக்காகின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!