Latestமலேசியா

25 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான 51 கிலோ கிராம் போதைப் பொருள் பேராக்கில் சிக்கியது; இருவர் கைது

குவாலா கங்சார், மார்ச் 18 – பேராக்கில் இருவரைக் கைதுச் செய்து, 51.5 கிலோ கிராம் ஷாபு போதைப் பொருளைப் பறிமுதல் செய்திருப்பதன் மூலம், போதைப் பொருள் விநியோக கும்பலொன்றை போலீஸ் முறியடித்துள்ளது.

30 வயது மதிக்கத்தக்க அவ்விரு மலேசிய ஆடவர்களும் சனிக்கிழமைக் காலை காரொன்றில் வைத்து கைதுச் செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு 25 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் என புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் காவ் கோக் சின் தெரிவித்தார்.

கடந்த பல மாதங்களாக செயல்பட்டு வந்த அக்கும்பல், வட மாநிலங்களில் இருந்து போதைப் பொருளைக் கடத்தி, பேராவுக்குள் விநியோகிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது.

போதைப் பொருளைக் கடத்திக் கொண்டுச் செல்வதற்கான அவ்விருவரும் முறையே 50 ஆயிரம் ரிங்கிட்டையும், 5 லட்சம் ரிங்கிட்டையும் சம்பளமாகப் பெற்று வந்திருக்கின்றனர்.

இருவரில் முக்கிய சந்தேக நபர் போதைப் பொருள் தொடர்பான குற்றப்பதிவுகளைக் கொண்டிருக்கும் வேளை, இருவருமே, போதைப் பொருள் உட்கொண்டது சிறுநீர் பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் கீழ் 7 நாட்களுக்கு இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!