Latestமலேசியா

32 ஆண்டுகாலம் வளர்த்த மகளை கொன்றுவிட்டாயே! பத்து காஜாவில் மருமகனை பார்த்து நீதிமன்றத்தில் கதறிய தாய்

பத்து காஜா, ஜூலை 1 – 32 ஆண்டு காலம் பாதுகாத்து வளர்த்த மகளை கொன்றுவிட்டாயே என்று குற்றஞ்சாட்டப்பட்ட மருமகனைப் பார்த்து தாய் ஒருவர் கதறியது நீதிமன்றத்தில் கூடியிருந்த ஊடகவியலாளர்களின் மனதையும் வேதனைப்படுத்தியது. எனது மகளை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தேன் . அவரை கொல்வதற்கு எப்படி மனது வந்தது என ரோஷித்தா ரட்சுவான் ( Rozita Radzuan ) தனது மருமகன் ஹைரில் ஹனாஸ் அப்துல்லாவை
( Hairil Annas Abdullah ) நோக்கி கண்ணீர் மல்க கேள்வி எழுப்பினார். குற்றஞ்சாட்டப்பட்ட ஹைரில் ( Hairil ) நீதிமன்ற லோக்காப்பிலிருந்து சிறைக்கு கொண்டுச் சென்றபோது 56 வயதுடைய ரோஷித்தா நீதிமன்றத்தில் கதறியபோது அவருக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆறுதல் கூறினர்.

விவகாரத்து கோரிய தனது மனைவியை கடந்த மாதம் கொலை செய்ததாக 37 வயதுடைய ஹைரில் மீது பத்து காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் அஸ்லின் ஸாத்தி ஜைனால் அபிடின் (Azlin Zati Zainal Abidin ) முன்னிலையில் மொழிபெயர்ப்பாளர் குற்றச்சாட்டை வாசித்தபோது அதனை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக ஹைரில் தலையை அசைத்தான். கொலைக் குற்றச்சாட்டு உயர்நீதிமன்றத்திற்கு உட்டபட்டதாக இருப்பதால் குற்றச்சாட்ட நபரிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஜூன் 20 ஆம் தேதி காலை 7.30 மணிக்கும் நண்பகல் 2 மணிக்குமிடையே பத்து காஜாவிலுள்ள ஹோட்டல் அறை ஒன்றில் 32 வயதுடைய தனது மனைவி Nisya Syahkila வை கொலை செய்ததாக ஹைரிஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் 30 முதல் 40 ஆண்டுவரை சிறைத் தண்டனை மற்றும் கூடியபட்சம் 12 பிரம்படி விதிக்கப்படும் தண்டனை சட்டத்தின் 302 ஆவது விதியின் கீழ் ஹைரில் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!