Latestமலேசியா

34வது மாடியிலிருந்து தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவர் பலி ; ‘பால்கனியில்’ சிக்கியிருந்த சட்டையை எடுக்க சென்றதால் நேர்ந்த விபரீதம்

கோலாலம்பூர், டிசம்பர் 27 – தலைநகர், கம்போங் பாருவிலுள்ள, “கொண்டோமேனியம்” ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் 34வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த 18 வயது பல்கலைகழக மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வீட்டின் “பால்கனியில்” சிக்கிக் கொண்டிருந்த சட்டையை எடுக்க சென்ற போது, அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததாக, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.

அச்சம்பவம் நேற்றிரவு மணி எட்டு வாக்கில் நிகழ்ந்ததை, டாங் வாங்கி போலீஸ் தலைவர் ACP நோர் டெல்ஹான் யாஹ்யா உறுதிப்படுத்தினார்.

மேஜை ஒன்றின் மீது ஏறி, பால்கனி வேலியை தாண்டி, சிக்கிக் கொண்டிருந்த சட்டையை எடுக்க முயன்ற அந்த ஆண் மாணவர், நிலைத்தடுமாறி கீழே விழுந்தது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!