Latestமலேசியா

5 மீட்டர் தூரத்திற்கு முன்னதாக லோரி கவிழ்ந்ததால் ஆடவர் உயிர் தப்பினார்

ஜெலுபு , பிப் 25 – சிரம்பான் -சிம்பாங் பெர்தாங் சாலையின் 34 ஆவது கிலோமீட்டரில் கம்போங் பண்டார் திங்கிற்கு அருகே மின் கம்பத்தை மோதியபின் சாலையின் நடுவில் லோரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஆடவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். தாம் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற இடத்திலிருந்த 5 மீட்டர் தூரத்திற்கு முன் அந்த லோரி கவிழ்ந்ததால் தாம் உயிர்தப்பியதாக 69 வயது முகமட் ஹுசின் தெரிவித்தார். தாம் பெக்கான் குவாலா கிளவாங் நகருக்கு சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த காருடன் மோதுவதை தவிர்க்க முயன்றபோது அந்த லோரி கவிழ்ந்ததை கண்டதாக அவர் கூறினார்.

தாம் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்ற இடத்திலிருந்து ஐந்து மீட்டர் தூரத்திற்கு முன்னே அந்த லோரி கவிழ்ந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்ததோடு , உயிர் பிழைத்தற்காக இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக முகமட் ஹுசின் தெரிவித்தார். அந்த விபத்தில் லோரி ஓட்டுனரான 49 வயதுடைய ஆடவரும் அவரது உதவியாளரான 41 வயது நபரும் காயம் எதுவுமின்றி உயிர் தப்பியதாக ஜெலபு மாவட்ட போலீஸ் தலைவர் துணை கண்காணிப்பாளர் மஸ்லான் உதீன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!