கோலாலம்பூர், டிச 28 – குழந்தைகளிடையே பாலியல் வன்கொடுமை வழக்குகள் இப்போது அதிகரித்த வண்ணமாகவே உள்ளது.
அதுவும், வெளிநபர்களால் குழந்தைகளுக்குப் பாதுகாப்பின்மை உள்ள சூழலில், வீடுகளுக்குள்ளேயே வன்கொடுமைகள் நடந்து வருவது கலக்கத்தை தந்து வருகிறது.
அப்படிதான், சமூக வலைத்தளத்தில் ஃபத்லி ஆசிரியை என்பவர் ஒரு தாயாருடன் பேசிய கலந்துரையாடலின் பதிவு சமீபத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பதிவின் படி, அந்த தாயின் ஒன்பது வயது மகன் அவரின் ஐந்து வயது உடன்பிறந்தவரை இயற்கைக்கு புறம்பான வகையில், பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தியதைப் பற்றி கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த பெண் அழுது கொண்டே அந்த ஆசிரியரிடம் உதவி கேட்டுள்ளார்.
இந்த பதிவினை பதிவிட்ட அக்கி ஃபைரூஸ் என்பவர் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு அந்தரங்க உறுப்புகள் பற்றி கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், பெற்றோர்கள் இது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.