
கோலா திரங்கானு, மே 5- சிறப்பு C தர கோழி முட்டைகளின் விநியோகத்தை வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அதிகரிக்கவுள்ளது.
கடந்த நோன்பு மாதத்தில், இந்த C தரத்திலான ஒரு அட்டை அதாவது 30 முட்டைகள் குறைந்தபட்ச விலையில், அதாவது 5 ரிங்கிட்டுக்கு விற்பட்டது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு, பக்காத்தான் ஹரப்பான் திறந்த இல்லத்தின் போது தெரிவித்தார்.
அதே நேரத்தில், இந்த அமலாக்கத்தினால், எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் கோழி முட்டைகளுக்கான மானியங்களை அரசாங்கம் முற்றிலுமாக நிறுத்தும்போது, முட்டை விலையின் நிலைப்பாட்டு தன்மை சீராக இருக்குமென்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, கோழி முட்டைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைத் தனது அமைச்சு தொடர்ந்து தடை செய்வதோடு உள்ளூர் சந்தையில் முட்டை விநியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்யும் என்பதையும் தெரிவித்துக் கொண்டார்