
சிரம்பான் – மே-27 – நெகிரி செம்பிலான் சிரம்பானில் 3 தெருநாய்கள் துரத்தியதில் சாலையில் விழுந்து உடல் முழுக்கக் காயமடைந்துள்ளார் ஐந்தாம் படிவ மாணவர் ஒருவர்.
ராசா ஜெயாவில் சனிக்கிழமை டியூஷன் முடிந்து மதியம் 12 மணிக்கு e-hailing காருக்காக காத்திருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது. சாலையில் விழுந்த பின்னரும், 17 வயது அம்மாணவரை அந்நாய்களில் ஒன்று தாக்க முற்பட்டது.
எனினும், அவ்வழியே சென்ற பொது மக்கள் நாயைத் தடுத்து அப்பையனைக் காப்பாற்றினர். கீழே விழுந்ததில் கை, கால்கள் மற்றும் முதுகில் அவர் காயமடைந்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என Darius Hazreeq Mohd Nor Azlan தெரிவித்தார்.
சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள போதிலும், 3 வாரங்கள் மருத்துவ விடுப்பு கொடுக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.