
பிந்துலு, ஜூலை-9-சரவாக் பிந்துலுவில், மனிதர்களைத் தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட 5 மீட்டர் நீளமுள்ள இராட்சத முதலை ஒன்று வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான (PERHILITAN) சுட்டுக் கொல்லப்பட்டது.
இந்த முதலை அப்பகுதி மக்களின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்பட்டு வந்தது.
அங்கு வசிப்பவர்களைத் தாக்கியதாகப் புகார்களும் எழுந்தன.
இதையடுத்து, அதனைப் பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு இறுதியில் சுட்டுக் கொல்லப்பட்டது.
Sungai Tatau பகுதியில் முதலைகள் மனிதர்களைத் தாக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருவதால், ஆற்றோரங்களிலும் நீர்நிலைகளிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனவிலங்குத் துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.



