Latestமலேசியா

பசியால் பகல் நேரத்தில் வெளியாகும் படைச்சிறுத்தை; மக்கள் பீதி

கூச்சிங், ஜூ-3 – சரவாக்கின் Mukah மாவட்டத்தில் பகல் நேரங்களில் ஒரு படைச்சிறுத்தை (cloud leopard) வெளியில் நடமாடுவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக இரவில் வெளியாகும் அச்சிறுத்தை, பசி காரணமாக தற்போது பகல் நேரங்களிலும் சுற்றித் திரிவது, வைரலான வீடியோவில் தெரிகிறது.

Saat Majuni எனும் Facebook பயனர் பதிவேற்றிய 23 வினாடி வீடியோவில், அச்சிறுத்தை சாலையில் உணவுக் கழிவுகளை தின்றுக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், வழக்கமாக மனிதர்களைக் கண்டாலே ஆக்ரோஷமாகப் பாயும் அல்லது ஓடிவிடும் இந்த படைச்சிறுத்தை, இம்முறை காரில் வந்த ஒரு குடும்பத்தை கொஞ்சமும் சேட்டை செய்யாமல், அதன் பாட்டுக்கு தின்பதில் கவனம் செலுத்தியது.

இது, அக்குடும்பத்தார் மேலும் தெளிவாக அச்சிறுத்தையைக் கைப்பேசியில் பதிவுச் செய்ய வசதியாய் போனது.

அதன் வாழ்விடத்தின் பெரும்பகுதி தற்போது செம்பனைத் தோட்டமாகி விட்டதால், வேறு வழியின்றி இரைத் தேடி அது சாலைக்குள் புகுந்து விடுவதாக நம்பப்படுகிறது.

‘Borneo கிளைப் புலி’ என்றும் அழைக்கப்படும் இப்படைச்சிறுத்தையினம், நாட்டில் வேகமாக அழிந்து வரும் மற்றும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்ட வனவிலங்காகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!