
கிள்ளான், ஜூன்-7 – கிள்ளான் துறைமுகத்தில் படகு கவிழ்ந்ததில் ஒரு கைக்குழந்தை உள்ளிட்ட மூவர் நீரில் மூழ்கி மாண்டனர்.
நேற்று மாலை 5 மணியளவில் தஞ்சோங் ஹாராப்பானிலிருந்து 500 மீட்டர் தொலைவில் அத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
உள்ளூரைச் சேர்ந்த 6 பேர் படகில் பயணம் செய்த நிலையில் ஒருவர் மீனவரால் காப்பாற்றப்பட்டார்.
எஞ்சிய இருவரைத் தேடி மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்றிரவு 10.30 மணி வரைக்குமான தகவலின் படி 2 ஆடவர்கள் மற்றும் ஒரு கைக்குழந்தையின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவத்திற்கான காரணம் இன்னும் தெரிய வரவில்லை.