Latestமலேசியா

போதைப்பொருள் உட்கொண்டு விட்டு பயணிகளை ஏற்றிச் சென்றார்; சோதனையில் பிடிபட்ட விரைவுப் பேருந்து ஓட்டுநர்

கோம்பாக், ஜூன்-11 – பயணிகளை ஏற்றிக் கொண்டு திரங்கானு, கெமாமான் செல்லும் வழியில் விரைவுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் நேற்று கைதானார்.

தொடக்கக் கட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் morphine வகை போதைப்பொருள் உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டதே அதற்குக் காரணம்.

ஹஜ் பெருநாளை ஒட்டி சாலைப் போக்குவரத்துத் துறை மேற்கொண்ட Op சோதனை நடவடிக்கையில், கோம்பாக் டோல் சாவடியில் 30 வயது அந்நபர் சிக்கினார்.

அப்பேருந்து பேராக், லூமூட்டிலிருந்து கிளம்பியதாகத் தெரிகிறது.

கைதான ஓட்டுநர் மேல் நடவடிக்கைக்காக AADK எனப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

அதே சோதனையில் பல்வேறு குற்றங்களுக்காக 60 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!