Latestஇந்தியாசிங்கப்பூர்மலேசியா

குவாலா லங்காட்டில் கடற்கரை ஓரமாக பெண்ணின் அழுகிய சடலம் கண்டெடுப்பு

குவாலா லங்காட், ஜூன்-12 – சிலாங்கூர், குவாலா லங்காட், கம்போங் தும்போக் தஞ்சோங் செப்பாட் கடற்கரையில், வெளிநாட்டவர் என நம்பப்படும் பெண்ணின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்டது.

சனிக்கிழமை மதியம் வாக்கில் அது குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக, குவாலா லங்காட் போலீஸ் தலைவர் Mohd Akmalrizal Radzi கூறினார்.

போலீஸ் சென்று பார்த்த போது சம்பவ இடத்திலோ சடலத்திலோ குற்ற அம்சங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

இதனால் அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சடலத்தை அடையாளம் காண வாரிசுகளைத் தொடர்புகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இதுவரை யாரும் தொடர்புகொள்ளவில்லை என Akmalrizal தெரிவித்தார்.

சம்பவம் குறித்து தகவல் தெரிந்தோர் தஞ்சோங் செப்பாட் போலீஸ் நிலையத்தைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!