Latestமலேசியா

ஜோகூர்-சிங்கப்பூர் எல்லையில் ஏற்படும் நெரிசலை சரி செய்ய EAIC திட்டம்

ஜோகூர் பாரு – ஜூன் 13 – சிங்கப்பூர் செல்வதற்கான ஜோகூர் பாரு எல்லையில் ஏற்படும் நெரிசல் பிரச்சனையை நிவர்த்தி செய்ய, சுல்தான் இஸ்கண்டார் கட்டிடத்திலுள்ள (Bangunan Sultan Iskandar), குடிவரவுத்ததுறையின் தனிமைப்படுத்தும் வளாகத்தின் (CIQ), கட்டமைப்புத் திட்டம் மற்றும் அமைப்பை மேம்படுத்துவதற்கான ஆய்வை மேற்கொள்ள வேண்டுமென முகமை ஒருமைப்பாடு ஆணையம் (EAIC) முன்மொழிந்துள்ளது.

இந்த திட்டத்தின் வழி, தற்போது அதிக கொள்ளளவில் இயங்கும் கட்டிடத்தைச் சுற்றியுள்ள போக்குவரத்து பற்றிய மதிப்பாய்வு செய்யப்படவுல்லதென்று EAIC தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் இஸ்மாயில் பாக்கார் கூறியுள்ளார்.

இம்முயற்சியை அமல்படுத்துவத்தில் கணிசமான செலவுகள் இருந்தாலும், இத்திட்டம் குறித்த ஆய்வை முதலில் தொடங்கவிருப்பதாக அவர் கூறினார்.

இந்த ஆய்வை செயல்படுத்த, மலேசிய எல்லைக் கட்டுப்பாடு பாதுகாப்பு நிறுவனம் (AKPS) மற்றும் உள்துறை அமைச்சு (KDN) ஆகியோரிடமும் பரிந்துரைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார் என்றார் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!