Latestமலேசியா

Socso, NEO புரிந்துணர்வு ஒப்பந்தம் மலேசியாவின் வேலை சந்தை சவால்களை எதிர்கொள்ளும் திறனை வலுப்படுத்துகிறது

பிரஸ்ஸல்ஸ் – ஜூன்-12 – சமூகப் பாதுகாப்பு நிறுவனமான SOCSO, NEO எனப்படும் பெல்ஜிய தேசிய வேலைவாய்ப்பு அலுவலகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இரு நிறுவனங்களுக்கிடையில் அறிவுப் பகிர்வுக்கான புதிய இடங்களைத் திறக்க இது உதவும் என மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார். இந்த வியூக ஒத்துழைப்பானது, சேவை வழங்கலின் தரத்தை குறிப்பாக வேலைவாய்ப்பு சேவைகள் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் திறனையும் கொண்டுள்ளது.

இதன் மூலம், NEO-வால் செயல்படுத்தப்படும் டிஜிட்டல் மாற்றம், யுக்திகள் மற்றும் மேம்பாடுகள் குறித்து ஆராயவும், உலக அளவில் எல்லை தாண்டிய மோசடிகளை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை ஆழப்படுத்தவும் SOCSO-வுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சொன்னார்.

அதே நேரத்தில், மனிதவள அமைச்சும் ஏற்கனவே உறுதியளித்தபடி சமூகப் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் வேலைவாய்ப்பு சேவைகளைத் தொடர்ந்து வலுப்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது என்றார் அவர்.

“பெல்ஜியத்துடன் ஒப்பிடும்போது, மலேசியாவில் சமூகப் பாதுகாப்பு அமைப்பு இன்னும் வளர்ச்சியடைந்து வருகிறது; இருந்தாலும் பல அம்சங்களை இன்னும் வலுப்படுத்த முடியும் – குறிப்பாக வேலைவாய்ப்பு காப்பீட்டு பாதுகாப்பு பாதுகாப்புத் திட்டம் மற்றும் முறையான மற்றும் முறைசாரா வேலைவாய்ப்புத் துறைகளை உள்ளடக்கிய அமுலாக்கம், பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பிற அம்சங்கள் என அவர் சுட்டிக் காட்டினார்.

நேற்று பிரஸ்ஸல்ஸில் (Brussels), SOCSO மற்றும் NEO இடையேயான MoU பரிமாற்றத்தின் போது உரையாற்றிய போது ஸ்டீவன் சிம் அவ்வாறு கூறினார்.

SOCSO துணைத் தலைமை நிர்வாகி எட்மண்ட் சியோங் பெக் ஹுவாங் மற்றும் NEO தலைமை நிர்வாக அதிகாரி Dr ஜீன் மார்க் வான்டன்பெர்க் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர்.

பெல்ஜியம், லக்சம்பர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான மலேசியத் தூதர் டத்தோ முஹமட் காலிட் அப்பாஸி அப்துல் ரசாக் மற்றும் SOCSO வேலைவாய்ப்பு சேவைகள் பிரிவுத் தலைவர் காயத்ரி வடிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!